அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கைப் பெண் தெரிவு
அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கையரான சமந்தா ரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகரத்தின் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட சமந்தா ரட்ணம், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து 6-5 என்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளார்.
முதன் முறையாக மோர்லன்ட் நகரில் சமந்தா ரட்ணத்தின் பசுமைக் கட்சி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் பிறந்த சமந்தா ரட்ணம் 1987 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறி ஐரோப்பா மற்றும் கனடாவில் வசித்து பின்னர் 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.
அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கைப் பெண் தெரிவு
Reviewed by NEWMANNAR
on
October 30, 2015
Rating:

No comments:
Post a Comment