கிரீஸில் அகதிகள் படகு மூழ்கியதில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
ஐரோப்பாவில் தஞ்சம் கோரி கடல் மார்க்கமாக கிரீஸ் நாட்டு காலிம்னோஸ் மற்றும் ரோட்ஸ் தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அகதிகளின் படகு மூழ்கியதில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 144 பேர் காப்பாற்றப்பட்டதாக கிரீஸின் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (30) காலை காலிம்னோஸ் தீவில் 19 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இதில் 6 பெண்கள், 10 குழந்தைகள் அடங்கும்.
துருக்கியிலிருந்து படகு மூலம் காலிம்னோஸ் தீவு நோக்கி இவர்கள் பயணித்துள்ளனர். இதேவேளை, ரோட்ஸ் அருகே கடலில் மற்றுமொரு படகு கவிழ்ந்ததில் சிலர் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் ஐ.எஸ். ஆக்கிரமிப்பு பகுதியில் அரச படைகள் முன்னெடுக்கும் கடும் தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதன்போது பலர் நடுக்கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
கிரீஸில் அகதிகள் படகு மூழ்கியதில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
October 30, 2015
Rating:

No comments:
Post a Comment