அண்மைய செய்திகள்

recent
-

வெட்டுப்புள்ளிகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்: கல்வி அமைச்சு...


தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான வெட்டுப் புள்ளிகளை குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அறிவிக்கப்பட்ட வெட்டுப் புள்ளி எண்ணிக்கையை குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யு.எம்.பந்துசேன தெரிவித்துள்ளார்.

வெட்டுப்புள்ளி எண்ணிக்கையை குறைக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நேற்று கல்வி அமைச்சிடம் கோரியிருந்தது.

வெட்டுப் புள்ளி 160 ஆக காணப்பட்டதாகவும் ஆறு புள்ளிகளிலேனும் இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமென சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கோரியிருந்தார்.

அவ்வாறு செய்யத் தவறினால் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

வெட்டுப்புள்ளிகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்: கல்வி அமைச்சு... Reviewed by Author on October 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.