உலக சலரோக தினத்தையொட்டி மன்னாரில் விழிர்ப்புனர்வு ஊர்வலம்.-PHOTOS
உலக 'சலரோக தினம்' இன்று (24) செவ்வாய்க்கிழமை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மக்களுக்கு விழிர்ப்புனர்வை ஏற்படுத்தும் வகையில் விழிர்ப்புனர்வு ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை(24)மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ரஜனி அன்ரன் சிசில் தலைமையில் குறித்த ஊர்வலம் ஆராம்பமானது.
இதன் போது தொற்றா நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி அன்ரன் சிசில்,மன்னார் பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகர் எம்.சஜானி, முசலி வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஒஸ்மன் சாள்ஸ்,மற்றும் வைத்தியர்கள், பொது சுகாதார வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள்,தாதியர்கள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இன்று காலை 8 மணியளவில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பமான குறித்த ஊர்வலம் மன்னார் வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
அதனைத்தொடர்ந்து குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மீண்டும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை சென்றடைந்தது.
குறித்த விழிர்ப்புனர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மக்கள் சலரோகத்தில் இருந்து இவ்வாறு தம்மை பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் விழிர்ப்புனர்வை ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியவாறு சென்றதோடு,துண்டுப்பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்
உலக சலரோக தினத்தையொட்டி மன்னாரில் விழிர்ப்புனர்வு ஊர்வலம்.-PHOTOS
Reviewed by Admin
on
November 24, 2015
Rating:

No comments:
Post a Comment