அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற வடக்கு-தெற்கு உறவுப் பரிமாற்ற நிகழ்வுகளின் இறுதி நிகழ்வுகள்.(படங்கள் இணைப்பு)

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டம் மற்றும் தென் மாகாண இளைஞர் யுவதிகளுக்கிடையில் கலை, கலாச்சார விளையாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் 3 ஆம் கட்ட நிகழ்வுகளான வடக்கு-தெற்கு உறவுப் பரிமாற்ற நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வு நேற்று(16) புதன் கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்ற குறித்த இருதி நாள் நிகழ்வின் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,உதவி மாவட்டச் செயலாளர் வி.பாவாகரன் பிரதேசச் செயலாளர்கள்,விளையாட்டுத்திணைக்கள அதிகாரிகள்,மாவட்ட செயலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-இதன் போது இடம் பெற்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக தென் மாகாணத்தில் இருந்து வந்த இளைஞர்,யுவதிகள் மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களினால் தமது கலை கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில் நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


(மன்னார் நிருபர்)

(17-12-2015)













மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற வடக்கு-தெற்கு உறவுப் பரிமாற்ற நிகழ்வுகளின் இறுதி நிகழ்வுகள்.(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on December 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.