மன்னார் மறைமாவட்டத்தின் 35 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு யாழ். ஆயரினால் திருப்பலி ஒப்புக்கொடுப்பு...
மன்னார் மறைமாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை நினைவு கூறும் விசேட திருப்பலி தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இன்று இடமபெற்றது.
குறித்த நிகழ்வுகள், யாழ் ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் தலைமையில் காலை 7:30மணியளவில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்டம் உதயமாகியதை நினைவுகூரும் ஆண்டு நிறைவு விழாக்கள் வருடாந்தம் தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இடம்பெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில் குறித்த 35ஆம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் முகமாக இன்று திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது
புதிய யாழ். ஆயர் முதல் முறையாக மன்னார் வந்திருந்த நிலையில் அவருக்கு மன்னார் மறைமாவட்ட மக்கள் அமோக வரவேற்பு வழங்கி வரவேற்றனர்.
இதன் பின்னர் நடைபெற்ற குறித்த திருப்பலியினை ஆயருடன் மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை உள்ளிட்ட பல அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்பு கொடுத்தனர்.
இதன்போது நூற்றுக்கணக்கான அருட் துறவிகள், அரசியல் பிரமுகர்கள், கலந்து கொண்டதுடன் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து பெரும் எண்ணிக்கையிலான இறை பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைமாவட்டத்தின் 35 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு யாழ். ஆயரினால் திருப்பலி ஒப்புக்கொடுப்பு...
Reviewed by Author
on
January 30, 2016
Rating:
No comments:
Post a Comment