அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய எச்-1 பி வீசா! விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 முதல் ஏற்பு


அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்-1 பி வீசாக்களை வழங்கி வருகிறது.

இந்த வீசாக்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த வீசாக்களுக்கு நல்ல மவுசு உள்ளது.

2017ம் நிதி ஆண்டுக்கான இந்த வீசா விண்ணப்பங்களை அமெரிக்கா ஏப்ரல் 1ம் திகதி முதல் ஏற்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ம் திகதி தொடங்குகிற (அமெரிக்க) நிதி ஆண்டுக்கு 65 ஆயிரம் எச்-1 பி வீசாக்கள் வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

முதலில் பெறப்படுகிற அமெரிக்காவின் முதுநிலை அல்லது உயர் பட்டங்கள் பெற்றவர்களின் 20 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு, இந்த 65 ஆயிரம் எச்-1 பி வீசா என்ற எண்ணிக்கை வரையறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

வீசா விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிற முதல் 5 பணி நாட்களிலேயே 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவியும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு கூறி உள்ளது.

மேலும், மிக அதிக எண்ணிக்கையிலான எச்-1 பி வீசா விண்ணப்பங்கள் பெறப்படுகிற போது கணினி வழி லாட்டரி குலுக்கல் நடத்தி வீசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய எச்-1 பி வீசா! விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 முதல் ஏற்பு Reviewed by Author on March 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.