மன்னார் -மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரெயில் மோதி ஒருவர் பலி
மன்னார் - மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரெயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை குறித்த சம்பவம் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பூமலர்ந்தான் கிராமத்தைசேர்ந்த கே.அபிஸ்டன் குமார் (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சடலம் மன்னார் பொதுவைத்தியாலையில் நேற்று மாலை 2 மணியளவில் கொண்டுவரப்பட்டு பிரேதபரிசோதணைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையை மடு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் -மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரெயில் மோதி ஒருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
March 14, 2016
Rating:
No comments:
Post a Comment