மாங்குளம் ஒலுமடு பகுதியில்வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு பகுதியில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் புலுமச்சி நாதகுளம் மாங்குளத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாரான செல்லையா தங்கவேல் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி விபத்து தொடர்பில் ஒருவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் புலுமச்சி நாதகுளம் மாங்குளத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாரான செல்லையா தங்கவேல் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி விபத்து தொடர்பில் ஒருவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மாங்குளம் ஒலுமடு பகுதியில்வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
Reviewed by NEWMANNAR
on
June 04, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 04, 2016
Rating:


No comments:
Post a Comment