வவுனியாவிற்கென பரிந்துரைக்கப்பட்ட புதிய பொருளாதார வலயம் எங்கு அமைக்கப்பட வேண்டும் -பேராசிரியர் பசுபதி சிவநாதன்
வவுனியாவிற்கென பரிந்துரைக்கப்பட்ட புதிய பொருளாதார வலயம் எங்கு அமைக்கப்பட வேண்டும்
இலங்கை அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டு க்கான வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளில் வட மாகாணத்திற்குள் நிறை வேற்ற வேண்டிய திட்டங்கள் என்ற வகையில் குறிப் பிடப்பட்டவற்றில் முக்கிய மானதொன்றாக இருப்பது,
1. வவுனியாவில் புதிய பொருளாதார வலயம் ஒன்றை நிறுவுவதற்கு 200 மில்லியன் செலவிட மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.
2. காரை நகரிலும் வல் வெட்டித்துறையிலும் மீன் பிடித் துறைமுகங்களை கட்டியெழுப்புதல் இவ் இர ண்டு திட்டங்களும் பிரதேச அபிவிருத்திச் செயற்பாட்டின் ;ஒரு கூறாகக் கொள்ள முடி யும். போருக்குப் பின்ன ரான போர் நடைபெற்ற பிரதேசத்தின் பொருளாதார செயற் ;பாட்டில் இவை எந்தளவு முக்கித்துவமுடையது என் பதை தற்போதைய நிலை யையும்எதிர்கால நிலை யையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குவது பொருத்தமுடையது எந்த வொரு பொருளாதார செயற் பாடும் மக்கள் நலவாழ் வோடும் நிலைத்து நிற்கும் பிரதேச பொருளாதார அபி விருத்தியோடும் இணை ந்து செல்லக்கூடியதாக இரு ப்பதே வினைத்திறனான பொருளாதார செயற்பாடாக இருக்கும். என்பதற்கான தீர்மான த்தை எடுக்கும் போது பிர தேச பொருளாதார மேம் பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
அதை வவுனியா நகரத்திலி ருந்து 2 அல்லது 3 கிலோ மீற்றர் தூரத்திற்குள் இருக்க ;வேண்டும் என்ற நிபந்த னையின் அடிப்படையில் தாண்டிக்குளத்திலேயே பெறவேண்டும் என தீர்மா னத்தை எடுப்பது பிரதேச பொருளாதார அபிவிருத் தியை ஏற்படுத்திவிடும் என கருதுவது எந்தளவு பொருத் தமானது என்பதை பொரு ளாதார நோக்கில் ஆராய் வது இன்றைய தேவையா கும்.
அவை தாண்டிக் குளத் தில் அமைக்கப்பட்ட பின்னர் அதுபற்றி கருத்துக் கூறுவது காலம் கடந்த சிந்தனை யாகவே இருக்கும் என்ப தால் இப்பிரதேச மக்களும் மக்களால் தெரிவு செய்யப் பட்ட மாகாணசபை பிரதி நிதிகளும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளும் இதுபற்றி நுணுக்கமாக பரிசீலனை செய்யவேண்டும். இத் திட்டம் வடமாகாண மக்க ளுக்கே ஒழிய வேறு யாரு க்கு மல்ல என்பதை நினை வில் இருத்திக்கொள்ள வேண் டும். இதனால் உண்மை யில் தாண்டிக்குளத்தில் இது அமைவது எந்தளவுக்கு பய னுடையது எந்தளவுக்கு பாத கமான விளைவை ஏற்படுத் தக்கூடியது என்பது பற்றி ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது அவசியமே பொருளாதார அபிவிருத்தி க்கான பொது முதலீடு கிடை க்கின்ற இச்சந்தாப்பத்தை வினைத்திறனுடன் பயன் படுத்துவதே சிறந்தது.
தாண்டிக்குளத்தை அண் டிய பகுதியில் 140 ஏக்கர் நிலம் 1947ஆம் ஆண்டிலி ருந்து விவசாய விதை உற் பத்திப் பண்ணையாக பயன் படுத்தப்பட்டு வருவதை யாவரும் அறிவர். அதில் 35 ஏக்கர் நிலப்பரப்பு 1989இல் இருந்து விவசாயக் கல்லூ ரிக்கு ஒதுக்கப்பட்டு விவ சாயக் கல்லூரி திறம்பட செயற்பட்டு வருவதும் யாவ ரும் அறிந்ததே இவ் இரண் டும் ஒன்றிணைந்ததான செயற்பாடுகளினூடாக விவ சாயப் பிரதேசமான வட மாகாணத்திற்கு நெல்விதை களை வழங்குவதோடு பாரம் பரிய நெல் இனங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் பரீட்சார்தமான புதிய நெல் இனங்கள் எமது பிரதேச மண்வளத்திற்கு பொருத்த மானதாக உள்ளதா என்ற ஆய்வுகளை காலம் கால மாக அவ்வப்போது மேற் கொண்டு விவசாயப்பெரு மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றது.
அவர் களின் இச் சேவைக்கான மதிப்பை பணத்தில் அள விடுவதாயின் பல ஆயிரம் மில்லியனுக்கு சமனான தாகும் எனவே அச் செயற் பாட்டிற்கு இடையூறு ஏற்படு மாயின் நேரடியான மற்றும் மறைமுகமான பல நன்மை களை இழந்து விடுவோம். அதுபோலவே எமது பிரதே சத்திற்கென தாண்டிக்குளத் தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரே ஒரு விவசாயக் கல்லூரி யின் சேவைகளும் பாதிக்கப் படக்கூடாது இவ் விவசாயக் கல்லூரியில் விவசாயப் போதனாசியர்களுக்கான கல் வியும் பயிற்சியும் வழங்கப் படுகிறது. எமது மண்ணுக்குப் பொருத்தமான விவசாயப் பயிர்களும் நாற்றுக்களும் விதைகளும் எமது மக்க ளால் பாரம்பரியமாக பாது காக்கப்பட்டு வந்த பழ மரங் களை பதுகாப்பது எமது நோக்கமாக இருக்க வேண் டும்
.உதாரணமாக கறுத்தக் கொழும்பான், பாண்டி, செம் பாட்டான,; வெள்ளைக் கொழு ம்பான், அம்பலவி, கிளிச் சொண்டன், போன்ற அரிய பழமரக் கன்றுகளின் தாய் மரக்கன்றுகளும் அவற்றி லிருந்து வருடாவருடம் பிறப் பாகம் செய்யப்பட்ட ஒட்டுத் தாவரங்களும் எதுவித தொற்று நோய்களாலும் பாதிக் படாத சூழலை ஏற்படுத்த வேண்டும் விவசாயக் கல்லூரி இதைப் பாதுகாத்து நீண்ட காலமாக எமக்கு சேவையாற்றி வரு வதை புதிய திட்டங்களி னூடாக சீரளிக்கக் கூடாது இவை ஒரு முறை பாதிக் ;கப்படுமாயின் இதை மீளக் கட்டி எழுப்புவதென்பது இயலாத காரியம் இது பல ஆயிரம் மில்லியன ;செலவிட் டாலும் சாத்தியப்படக்கூடிய தொன்றல்ல.
அமையப்போகும் பொரு ளாதார வலயம் தாண்டிக் குளத்தில் அமையுமானால் மேற் குறிப்பிட்ட விவசாயப் பண்ணையின் வினைத்திற னான செயற்பாடும் விவசா யக் கல்லூரியின் விலை மதிப்பற்ற சேவையும் பாதி க்கப்படும் குறிப்பாக பொருளா தார வலயத்திற்கென ஒதுக்க படும் நிலத்தில் மேற்கொள் ளப் போகும் செயற்பாடுகளி னால் ஏற்படப்போகும் திண் மக கழிவுகளினால் மாசு படுத்தப்பட்ட கழிவு நீர் கழிவு நீர் வாய்க்கால்கள் வாகனக் கழிவுகள் வாகன நெருக்கடி களால் ஏற்படும் காற்று மாச டைதல் போன்றவை அரு கில் உள்ள நிலங்களையும் அருகில் செயற்படுத்தப்படும் பொருளாதார நடவடிக்கை களிலும் மிகப்பெரும் பாதி ப்பை நேரடியாகவும் மறை முகமாகவும் ஏற்படுத்தும் இவற்றின் பெறுமதி பொரு ளாதார வலயம் எற்படுத்துவ தற்கு செலவிடும் 200 மில் லியன் ரூபாவைவிட அதி கம்.
குறிப்பிட்ட செயற்பாட்டி ற்கு எடுக்கப்படும் பொருளா தாரத் தீர்மானகள் ஏனைய பொருளாதார செயற்பாடு களுக்கும் ஒத்திசைவான தாக இருக்கவேண்டும் எதிர் காலத்தில் அப்பொருளாதார செயற்பாடு குறித்த பொருளா தார செயற்பாட்டின் விரிவாக் கத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் அவசிய மானதாகும்
. இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் ஒன்றான மத்திய மாகாண த்தில் பொருளாதார வலயம் தம்புள்ளையில் அமைக்கப் ;பட்டுள்ளது இதற்கு மத்திய அரசுகண்டியில் இருந்து 2 கிலோ மீற்றருக்குள் இருக்க வேண்டுமென்ற நிபந்த னையை விதிக்க வில்லை எனக் கருத வேண்டியுள் ;ளது. தம்புள்ளையில் பொருளா தார வலயம் அமைக்கப் பட்டதால்; புதியதொரு நகரம் உருவாகியுள்ளது அத்துடன் பொருளாதார செயற்பாடுகள் புதிய நகரத்துடன் இணைந் ததாக தன்னியல்பாகவே விரிவடைந்து செல்வதால் மறைமுகமாக வேலை வாய் ப்பும் தொழில்துறைகளின் வளர்ச்சியும் தொடர்கின்றது இதுவே அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் போக்கையும் தீர்மானிக்கின்றது
இது போலவே வடமத்திய மாகா ணத்திற்கான பொருளாதார வலயம் தம்புத்தேகமவில் ஆரம்பிக்கப்பட்டதால் வடமத்தியமாகாணத்தில் உப நகரம் ஒன்று உருவாகி பிரதேச அபிவிருத்திக்கு உதவுகின்றது. இவ்வாறான அனுபவங்களின் பின்ன ணியில் நேக்கும்போது தாண்டிக்குளத்தில் 5 ஏக் கரில் அமையப்போகும் பொரு ளாதார வலயம் எதுவித பொருளாதார அபிவிருத்தித் தொலை நேக்கும் இல்லா மல் எடுக்கப்படும் தீர்மான மாகவே இருக்கும்.
தாண் டிக் குளத்திற்குப் பதிலாக ஓமந்தையில் 35 ஏக்கரைக் கொண்ட மாணிக்கர் வள வில் இப்பொருளாதார வல யம் அமைக்கப்படுவது பொரு த்தமானது என்ற வாதம் ஏற்புடையதாக விருக்கும். ஒப்பீட்டு ரீதியில் மேட்டு நிலத்தையும் எதிர்காலத் தில் பொருளாதார வலயம் பலதொழில் துறைகளுடன் விவரிக்கப்படக் கூயளவுக்கு நிலத்தையும் புதிய உப நகர த்தின் விரிவாக்கத்திற்கான வாய்ப்புக்களையும் கொண் ;டதாகவுள்.
அத்துடன் விவ சாயப்பிரதேசமாக இரு ப்பதால் தொழிலாளர் தேவை யை இலகுவாக நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும் பொருளாதார அபிவிருத்தி அனுபவங்களின் அடிப்ப டையில் எல்லா அபிவிருத் தியடைந்த பொருளாதார ங்களிலும் விவசாயத்துறை யே கைத்தொழில் துறைக்கு மலிவான தொழிலாளரை வழங்கியுள்ளது எனவே எதிர்கால விரிவாக்கத்திற்கு ஓமந்தை பொருத்தமானது இதைவிட போரால் பாதிக் கப்பட்ட கிளிநெச்சி, முல்லை த்தீவு, மாங்குளம் போன்றவை அரசால் தெரிவு செய் ;யப்பட்டிருந்தால் இப் பிர தேசங்களின் மீள் எழுச்சிக்கு மிகப்பொருத்தமாக இருக்கும். ;தாண்டிக்குளத்தில் இது அமை க்கப்படுமானால் தற்போது ள்ள வவுனியா நகர விரி வாக்கம் எதிர்காலத்தில் நிலப்பற்றாக்குறையை எதிர் கொள்ளும் என்பதில் எது வித சந்தேகமும் இல்லை.
அத்துடன் இன்றைய வவுனி யா நகரின் வர்த்தக மையமும் அதை நீண்ட காலமாக சிறந்த உச்சப்பயன்பாட்டிற்கு உட்படுத்திய வவுனியா பிரதேசத்தின் வர்தகர்கள் தங்கள் பொருளாதார வாய்பை இழக்க்கூடிய சந்தர் பங்களும் ஏற்படும் புதிய பொருளாதார வலயத்தில் உருவாகப்போகும் வர்தக மையத்தில் விற்பனை நிலை யங்களின் பங்கீடு புதிய விதி முறைகளுக்கமைவாக இருப் பதற்கான வாய்ப்பு இருப்ப தால் பாரம்பரியமாகத் தமக் கிருந்த வாய்ப்புக்களை வவுனியா வர்த்தகர்கள் இழந்துவிடுவர் வேறு பிரதேசத்தவர்களே பொரு ளாதார வலயத்தில் அதிக நன்மையடைபவர்களாக மாற்றமடைவர்.
இரண்டாவதாக ஏற்கனவே கட்டி எழுப்பப்பட்ட மைலிட்டி மீன் பிடித்துறைமுகத்தை விடுத்து மீன்பிடித்துறைமுக நிர்மாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காரைநகர்ப் பிரதேசமும் வல்வெட்டித் ;துறை பிரதேசமும் பொருத்த மானதா? மீன்பிடித்துறை முக நிர்மாணத்தினூடாக மீனவர் பிரச்சினைகள் தீர்க் கப்படுமா எதிர்காலத்தில் அவர்களின் தொழில் வினை த்திறனாக செயற்பட வாய்பு ள்ளதா? மீனவர்களின் மீள் குடியேற்றத்தை புதிய மீன் பிடித்துறைமுக நிர்மாணத் தினூடாக விரைவுபடுத்த முடியுமா? அவர்கள் தமது சொந்த நிலத்தில் இருந்து மகிழ்வோடு மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு 1983 ஆம் ஆண்டுகளில் பெற்ற வருமானத்தைப் பெற ஆவன செய்ய முடியுமா? என்பது பற்றி ஆழமாக சிந்தி த்து செயற்பட வேண்டிய தருணமிது.

தேசிய அரசாங்கமே வரவு செலவுத்திட்டத்தைப் ;போடுகின்றது இதற்கான அமைச்சரே தீர்மானிக்கும் பொறுப்புடையவர் என்று நீங்கள் வாதம் செய்தால் எங்கள் பிரதேசத்தவருக்கு இது எந்த இடத்தில் இருப்பது பொருத்தமானது என்ற வகையில் இடத் தைத் தெரிவு செய்யும் உரிமை இல்லையா? நான் அறிந்த அளவிற் கு பிச்சைக்காரனுக்கும் அடி மைக்கும்தான் எதுவித தெரிவு உரிமையும் இல் லை இந்;நிலையில்; நாம் ஒன்றை ஏற்றுக் கொள் ளுதல் வேண்டும.; வடமாகா ணத்தில் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்டவற்றில் ஏதோ ஒருவகையைச்சார் ந்தவர்கள் என்று அரசியல் வாதிகள் வெளிப்படை யாக குறிப்பிடுவார்களா யின் இதுபற்றி பேசுவதில் எதுவித பயனும் இல்லை என்ற முடிபிற்கு வரு வோம்.
வவுனியாவிற்கென பரிந்துரைக்கப்பட்ட புதிய பொருளாதார வலயம் எங்கு அமைக்கப்பட வேண்டும் -பேராசிரியர் பசுபதி சிவநாதன்
Reviewed by NEWMANNAR
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment