அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 13 இராமேஸ்வரத்து மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 13 இராமேஸ்வரத்து மீனவர்களையும் nhடர்ந்தும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.


-இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி மற்றும் ஜீன் மாதம் 6ஆம் திகதிகளில் 13 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

-இந்த நிலையில் குறித்த 13 இராமேஸ்வரத்து மீனவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரனைக்காக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

-இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா குறித்த மீனவர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 13 இராமேஸ்வரத்து மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு. Reviewed by NEWMANNAR on July 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.