மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக கூறிய வடமாகாண சுகாதார அமைச்சர் இது வரை நிவர்த்தி செய்யவில்லை-பொது அமைப்புக்களின் ஒன்றியம் குற்றச்சாட்டு.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம் பெற்ற போது முன் வைக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக கூறிய போதும் இது வரை எவ்வித நடவடிக்கைகளையும் வடமாகாண சுகாதார அமைச்சர் மேற்கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் நேற்று திங்கட்கிழமை(11) வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்திலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ளக ரீதியில் பல்வேறு விதமான குறைபாடுகள் குறித்து கடந்த 23-05-2016 அன்று மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடலின் போது பல்வேறு குறைபாடுகள் முன் வைக்கப்பட்டது.
குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக வடமாகாண சுகாதார அமைச்சர் என்ற வகையில் கூறினீர்கள்.
ஆனால் இது வரை எவ்வித குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டதாக தெரியவில்லை.
எனவே 'மாற்றங்கள் ஏற்றங்கள் இன்றியே தொடர்கின்றது' தங்களின் நகர்விலும் பாராமுகமாக உள்ளதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.
ஒரு வாரத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக்குழு அமைக்கப்படும் என உத்தரவாதம் வழங்கினீர்கள்.
ஆனால் ஆறு வாரம் கடந்தும் அணுவும் நகரவும் இல்லை.
உங்கள் உத்தரவாதம் இது தானா?தென்னிலங்கை அரசியல் வாதிகளை தமிழ் அரசியல் வாதிகளும் விஞ்சிவிடுவார்களோ எனும் ஐயம் எழுகின்றது.
எனவே உயிர் காக்கும் உத்தம சேவையினை ஸ்திரப்படுத்த வேண்டியது உங்களின் தார்மீக கடமையாகும்.
அதனை விரைவாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளுகின்றோம்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக கூறிய வடமாகாண சுகாதார அமைச்சர் இது வரை நிவர்த்தி செய்யவில்லை-பொது அமைப்புக்களின் ஒன்றியம் குற்றச்சாட்டு.
Reviewed by NEWMANNAR
on
July 12, 2016
Rating:

No comments:
Post a Comment