பேசாலை 1 ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளக்கஞ்சாப்பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைது.-Photos
மன்னார் பேசாலை 1 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் கேரளக்கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவரை நேற்று புதன் கிழமை இரவு பேசாலை பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞரிடம் 7 பொதிகளைக்கொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் அதன் நிறை 14 கிலோ 550 மில்லி கிராம் என தெரிவித்த பேசாலை பொலிஸார் குறித்த கேரளக்காஞ்சா பொதிகள் 14 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என தெரிவித்துள்ளனர்.
பேசாலை பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் சசிக்குமார்(89049) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும்,பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.கின்சிலி ஹேரத் அவர்களின் வழி நடத்தலில் கீழ் பேசாலை பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஜெயரூபன் தலைமையில் சென்ற பொலிஸ் அதிகாரிகளான சசிக்குமார்(89049), சாபித்(89043),ஏக்கநாயக்க(78433) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் நேற்று (3) புதன் கிழமை இரவு 10.30 மணியளவில் பேசாலை 1 ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் இரகசிய தேடுதல்களை மேற்கொண்ட போது குறித்த கஞ்சாப்பொதிளை விற்பனைக்காக கொண்டு வந்த இளைஞரை கைது செய்ததோடு,குறித்த கஞ்சாப்பொதிகளையும் மீட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரனைகளின் பின் குறித்த இளைஞன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேசாலை 1 ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளக்கஞ்சாப்பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைது.-Photos
Reviewed by NEWMANNAR
on
August 04, 2016
Rating:

No comments:
Post a Comment