அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கற்கிடந்த குளம் றோ.க.த.க.பாடசாலையின் அதிபராக 15 வருடங்கள் கடமையாற்றி இடமாற்றம் பெற்ற அதிபருக்கு சேவை நலன் பாராட்டு விழா-Photos



மன்னார் கற்கிடந்த குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராக கடந்த 15 வருடங்களாக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற அப்பாடசாலையின் முன்னாள் அதிபர் 'பேதுரு பாக்கியநாதன்' அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா நேற்று(15) வியாழக்கிழமை மாலை பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரியான் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பழையமாணவர் சங்க பிரதி நிதிகள்,பெற்றோர்,ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த 15 வருடங்களாக யுத்த காலப்பகுதியில் குறித்த பாடசாலையில் ஆளுமை மிக்க அதிபராக கடமையாற்றி மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் உகந்த ஓர் அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர் பேதுரு பாக்கியநாதன் அவர்கள் ஆற்றிய சேவை தொடர்பாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த அதிபரை பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்,கிராம மக்கள் பாராட்டியதோடு, நினைவுச்சின்னங்களையும் வழங்கி குறிப்பாக தங்க மேதிரம் அணிவித்து அதிபரை கௌரவித்தனர்.

இறுதியதாக பாடசாலையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தனது மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் கொள்ளவணவு செய்யப்பட்ட ஒரு தொகுதி தளபாடங்களை பாடசாலை அதிபரிடம் வைபவ ரீதியாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


















மன்னார் கற்கிடந்த குளம் றோ.க.த.க.பாடசாலையின் அதிபராக 15 வருடங்கள் கடமையாற்றி இடமாற்றம் பெற்ற அதிபருக்கு சேவை நலன் பாராட்டு விழா-Photos Reviewed by NEWMANNAR on September 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.