செல்வம்அடைக்கலநாதனின் தந்தை காலமானார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தந்தை இன்று (4) ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ் வைத்திய சாலையில் காலமானார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன் (வயது-83),திடீர் சுகவீனம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (4) அதிகாலை மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் யாழ் வைத்தியசாலையில் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன் (வயது-83) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளார்.
இத்தகவலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் உறுதிப்படுத்தியுள்ளதோடு இறுதி கிரிகைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன் ஒரு சிறந்த சித்த வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்அடைக்கலநாதனின் தந்தை காலமானார்.
Reviewed by NEWMANNAR
on
December 04, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 04, 2016
Rating:

No comments:
Post a Comment