மின்சார தடை எப்போதும் இல்லை! பரிசு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீடித்தால் மின்சார விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் மழை கிடைக்கவில்லை என்றாலும் மின்சாரம் தடைப்படாது என அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.
அத்துடன் மின்சார கட்டணம் உயர்த்தப்படாதென மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு விசேட பரிசு வழங்கப்படும் வேலைத்திட்டம் ஒன்று செயற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண மின்குமிழ்களுக்கு பதிலாக எல்.ஈ.டி மின்குமிழ்களை இலவசமாக வழங்குவதற்கான யோசனையை விரைவில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
மின்சார தடை எப்போதும் இல்லை! பரிசு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
Reviewed by Author
on
January 21, 2017
Rating:

No comments:
Post a Comment