தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் இணைப்பு)
தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் இணைப்பு)
-பெற்றோர்களே இது உங்களின் மேலான கவனத்திற்கு...
(25-05-2017)
தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவர் மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று(24) புதன் கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
-கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி நேற்று(24) புதன் கிழமை பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
-உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிர பல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரிய வந்தள்ளது.
சம்பவ தினம் அன்று தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வாடகை வீட்டிற்குச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
-குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள போது தனது வேதனைகள் உள்ளடங்கிய கடிதம் ஒன்றை சுமார் 3 பக்கத்தில் எழுதிய நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
முழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.
-சம்பவ தினமான புதன் கிழமை(24) குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பை ஒன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை பேரூந்தில் வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மாணவி வங்காலை புகையிரத கடவையில் இருந்து மன்னார் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் கொழும்பில் இருந்து தலை மன்னார் நோக்கி நேற்று(24) புதன் கிழமை மாலை பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
-இதன் போது மாணவியான குறித்த யுவதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
-குறித்த மாணவியில் உடலம் குறித்த புகையிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு,குறித்த யுவதியின் உடமையும் சோதிக்கப்பட்டது.
-இதன் போது குறித்த யுவதி மணதை வேதனைக்கு உள்ளாக்குகின்ற வகையில் சுமார் 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வருகின்றது.
குறித்த கடிதத்தில்,,,
-தனக்கு மட்டும் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் ஏற்படுவதாகவும்,தனது தாய் தன்னை தனியாக தவிக்க விட்டுள்ளதாகவும்,அம்மா அம்மா என்று தான் வலிந்து சென்றுள்ள போதும் கல் நெஞ்சம் கொண்ட அம்மாவாக அவர் நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
-மேலும் தனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு தன்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைப்பதாகவும்,தொடர்ந்தும் தனக்கு துறோகம் செய்ய நினைபப்தாகவும் குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
-எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த முடிவை எடுத்துளள்தாக தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவியின் உடமையில் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-தற்போது குறித்த மாணவியின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படடைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வரகின்றனர்.
-குறித்த சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தற்கொலை செய்து கொண்டுள்ள குறித்த மாணவியின் உடமையில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் தனது தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எழுதப்பட்டுள்ள விடையங்கள் பலரையும் வேதணைக்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-பெற்றோர்களே இது உங்களின் மேலான கவனத்திற்கு...
(25-05-2017)
தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவர் மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று(24) புதன் கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
-கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி நேற்று(24) புதன் கிழமை பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
-உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிர பல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரிய வந்தள்ளது.
சம்பவ தினம் அன்று தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வாடகை வீட்டிற்குச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
-குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள போது தனது வேதனைகள் உள்ளடங்கிய கடிதம் ஒன்றை சுமார் 3 பக்கத்தில் எழுதிய நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
முழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.
-சம்பவ தினமான புதன் கிழமை(24) குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பை ஒன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை பேரூந்தில் வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மாணவி வங்காலை புகையிரத கடவையில் இருந்து மன்னார் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் கொழும்பில் இருந்து தலை மன்னார் நோக்கி நேற்று(24) புதன் கிழமை மாலை பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
-இதன் போது மாணவியான குறித்த யுவதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
-குறித்த மாணவியில் உடலம் குறித்த புகையிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு,குறித்த யுவதியின் உடமையும் சோதிக்கப்பட்டது.
-இதன் போது குறித்த யுவதி மணதை வேதனைக்கு உள்ளாக்குகின்ற வகையில் சுமார் 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வருகின்றது.
குறித்த கடிதத்தில்,,,
-தனக்கு மட்டும் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் ஏற்படுவதாகவும்,தனது தாய் தன்னை தனியாக தவிக்க விட்டுள்ளதாகவும்,அம்மா அம்மா என்று தான் வலிந்து சென்றுள்ள போதும் கல் நெஞ்சம் கொண்ட அம்மாவாக அவர் நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
-மேலும் தனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு தன்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைப்பதாகவும்,தொடர்ந்தும் தனக்கு துறோகம் செய்ய நினைபப்தாகவும் குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
-எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த முடிவை எடுத்துளள்தாக தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவியின் உடமையில் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-தற்போது குறித்த மாணவியின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படடைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வரகின்றனர்.
-குறித்த சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தற்கொலை செய்து கொண்டுள்ள குறித்த மாணவியின் உடமையில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் தனது தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எழுதப்பட்டுள்ள விடையங்கள் பலரையும் வேதணைக்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி- மன்னாரில் சம்பவம்-(ஆதாரம் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
May 25, 2017
Rating:

No comments:
Post a Comment