மனித உயிர்களை காக்க தயாராகும் செயற்கை ஈரல்கள்!
மனித அங்கங்கள் செயற்கையான முறையில் விஞ்ஞான ஆய்வுகூடங்களில் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது ஈரலினை உருவாக்குவதற்கான முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று ஈடுபட்டுள்ளது.
இதனை குழந்தை ஈரல் (Baby Liver) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
இந்த முயற்சி வெற்றியளிக்குமாயின் அமெரிக்காவில் மட்டும் 17,000 ஈரல் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.
ஈரலை செயற்கையாக உருவாக்குவது தொடர்பாக 2011 ஆம் ஆண்டு Sangeeta Bhatia என்பவரும் அவரது குழுவினரும் சேர்ந்து ஆய்வு செய்துள்ளனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது ஆய்வுகூடத்தில் ஈரல் உருவாக்கப்பட்டு வருகின்றது.
மனித உயிர்களை காக்க தயாராகும் செயற்கை ஈரல்கள்!
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment