அலாஸ்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை: வடகொரியா மீண்டும் சோதனை....
பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, தொடர்ந்து ஏவுகணை மற்றும் மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது வெற்றி பெற்றுள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணையானது அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொரியா தீபகற்ப பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது உலக நாடுகளிடையே அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஐ.நா. பொதுக்குழுவை அவசரமாக கூட்டவும் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஐ.நா. அவசரக் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
அலாஸ்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை: வடகொரியா மீண்டும் சோதனை....
Reviewed by Author
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment