அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு, வவுனியாவில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்!


நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக தெற்கு மாகாணங்களிலும் இடைக்கிடையே கடும் காற்று வீசக்கூடும். மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவனை, மழையுடன் கடும் காற்று மற்றும் மின்னல் ஆபத்துக்கள் ஏற்படும். இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

இலங்கையின் தென் பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வரும் போதும், வடமாகாணத்தில் கடும் வறட்சியான நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மழைபெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு, வவுனியாவில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்! Reviewed by Author on July 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.