அண்மைய செய்திகள்

recent
-

விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றுவதே நாட்டுக்கு நல்லது – சுமந்திரன்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதே நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், இனங்களுக்குமிடையிலான நல்லிணக்கத்துக்கும் நல்லது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். ஆனால் அதனை கட்சித் தலைமை இன்னமும் ஏற்கவில்லை.

இருந்தாலும், நான் அவருக்கெதிராக எந்தவொரு சதித்திட்டத்தையும் தீட்டவில்லை. அவர் நாட்டுக்கெதிராகச் செயற்பட்டு வருகின்றார்.

இவரினால் நாட்டின் இன ஒற்றுமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆகவே இவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது ஒரு சதியல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றுவதே நாட்டுக்கு நல்லது – சுமந்திரன்! Reviewed by NEWMANNAR on July 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.