கூட்டமைப்பிற்கு விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்தது! மனம் திறந்தார் சம்பந்தன்....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்ததாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றுமையாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளையினருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யார் உருவாக்கினார்கள் என்பது முக்கியமல்ல. கூட்டமைப்பின் பெயரை சொல்லியே நாம் அரசியலில் அடையாளத்தை காட்டியுள்ளோம்.
மேலும், தமிழரசு கட்சியின் சார்பில் தாம் அரசியலில் பிரவேசிக்கவில்லை. கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டு இருக்கின்றோம்.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்ததாக இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பிற்கு விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்தது! மனம் திறந்தார் சம்பந்தன்....
Reviewed by Author
on
July 13, 2017
Rating:
Reviewed by Author
on
July 13, 2017
Rating:


No comments:
Post a Comment