அண்மைய செய்திகள்

  
-

டோனிக்கு இனிமேல் வாய்ப்பு கிடைக்காது.. இதுவே கடைசி தேர்வு குழு தலைவர் அதிரடி...


டோனிக்கு இனி வாய்புகள் அதுவாக தேடி வராது, இதுவே கடைசி, இனி வரும் தொடர்களில் அவர் அவருடைய இடத்திற்காக போராட வேண்டி இருக்கும் என்று தேர்வு குழு தலைவர் பிரசாத் கூறியுள்ளார்.

இந்திய-இலங்கை அணிகளுக்கிடையேயான 5 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடர் வரும் 20 ஆம் திகதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தேர்வுகுழு தலைவர் பிரசாத், டோனிக்கு வாய்புகள் அதுவாக தேடி வராது. இதுவே கடைசி இனி வரும் தொடர்களில் அவர் அவருடைய இடத்திற்க்காக போராட வேண்டும்.


நன்றாக செயல்பட்டால் மட்டுமே அவருக்கான இடம் அணியில் கிடைக்கும். இளம் வீரர்கள் பலர் வெளியே காத்துக்கிடக்கின்றனர். அவர்களும் நன்றாக செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கும் அணியில் இடம் கொடுக்கப்பட வேண்டும். 2019-ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரை மனதில் வைத்து அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன என கூறியுள்ளார்.

டோனிக்கு இனிமேல் வாய்ப்பு கிடைக்காது.. இதுவே கடைசி தேர்வு குழு தலைவர் அதிரடி... Reviewed by Author on August 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.