முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 120 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்த றிப்கான் பதியுதீன்
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குற்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்த கோழிக்குஞ்சுகளை தெரிவு செய்த பயனாளிகளுக்கு இன்று புதன் கிழமை(6) வழங்கி வைத்தார்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 5 கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 120 பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முசலி பொது மண்டபத்தில் வைத்து குறித்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் அமைச்சரின் இணைப்பபாளர் முஹமட் முஜாஹிர் மற்றும் மீள்குடியேற்ற துரித செயளனி மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.முஜீப் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்துளள்மை குறிப்பிடத்தக்கது.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 5 கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 120 பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முசலி பொது மண்டபத்தில் வைத்து குறித்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் அமைச்சரின் இணைப்பபாளர் முஹமட் முஜாஹிர் மற்றும் மீள்குடியேற்ற துரித செயளனி மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.முஜீப் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்துளள்மை குறிப்பிடத்தக்கது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 120 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்த றிப்கான் பதியுதீன்
Reviewed by NEWMANNAR
on
September 06, 2017
Rating:

No comments:
Post a Comment