அண்மைய செய்திகள்

recent
-

70 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கும் தமிழரின் இனப்பிரச்சினையை கூட்டமைப்பு பின்னோக்கி நகர்த்தியுள்ளது...


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏறத்தாழ 70 வருடங்களாக தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளை வெறும் ஒன்றே கால் பக்கத்துக்குள் அடக்கியிருக்கின்றது என்பது தெரிய வருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


   மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்  இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், அறிக்கையின் ஆங்கிலப் பிரதியினைப் பார்த்தீர்களானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏறத்தாழ 70 வருடங்களாக தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளை வெறும் ஒன்றே கால் பக்கத்துக்குள் அடக்கியிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. வேறு அறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளதே தவிர திடமாகத் தமக்கு வேண்டியவற்றைக் கூறத் தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாணசபையும் தமிழ் மக்கள் பேரவையும் போதுமான விபரங்களுடன் தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தன. மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றதே தவிர என்னென்ன அதிகாரங்கள் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பன பரிந்துரை செய்யப்படவில்லை. இதேவேளை, ஒட்டு மொத்தத்தில் இவ் இடைக்கால அறிக்கையானது தமிழரின் இனப் பிரச்சினை தொடர்பான பயணத்தினை பின்னோக்கி நகர்த்தியுள்ளதாகவே கருதலாம் என குறிப்பிட்டுள்ளார்.


70 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கும் தமிழரின் இனப்பிரச்சினையை கூட்டமைப்பு பின்னோக்கி நகர்த்தியுள்ளது... Reviewed by Author on September 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.