சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை!
16வயதுக்குகுறைந்தசிறுமியை காதலித்து பாலியல் வல்லுறவு புரிந்த குற்றத்தில் முல்லைத்தீவு இளைஞன் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுமுல்லைத்தீவு, மாங்குளம், ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளை ஞன், 2011 ஆம் ஆண்டு ஜூலை மற்று ம் நவம்பர் மாதங்களில் சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை காதலித்து ஏமாற்றி பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தி ஒரு குழந்தைக்கு தாயாக்கியுள்ளார். அதனையடுத்து குறித்த இளைஞன் தன்னை திருமணம் செய்வார் என காத்திருந்த பெண் அவர் வேறு திருமணமாகியுள்ளார் என்பதனை அறிந்து பொலிஸில் முறைப்பாடு தொடுத்துள்ளார்.
இவ் முறைப்பாட்டினையடுத்து குறித்த நபரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த 24.08.2017 ஆம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று சாட்சியங்கள் மன்றினால் பரிசீலிக்கப்பட்டு நேற்று27.10.2017 தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் குறித்த இளைஞன் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையை காதலிப்பதாக தெரிவித்து பாலியல் வல்லுறவுக்குஉட்படுத்தியமைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிறந்த குழந்தைக்கு மூன்று இலட்சம் ரூபா நஸ்டஈடு செலுத்துமாறும்அதை செலுத்த தவறின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமெனவும் தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாவை செலுத்துமாறும்அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடுமென தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழ க்கினை நெறிப்படுத்தியிருந்தார்.
இவ் முறைப்பாட்டினையடுத்து குறித்த நபரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த 24.08.2017 ஆம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று சாட்சியங்கள் மன்றினால் பரிசீலிக்கப்பட்டு நேற்று27.10.2017 தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் குறித்த இளைஞன் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையை காதலிப்பதாக தெரிவித்து பாலியல் வல்லுறவுக்குஉட்படுத்தியமைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பிறந்த குழந்தைக்கு மூன்று இலட்சம் ரூபா நஸ்டஈடு செலுத்துமாறும்அதை செலுத்த தவறின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமெனவும் தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாவை செலுத்துமாறும்அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடுமென தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழ க்கினை நெறிப்படுத்தியிருந்தார்.
சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை!
Reviewed by NEWMANNAR
on
October 28, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 28, 2017
Rating:

No comments:
Post a Comment