அண்மைய செய்திகள்

recent
-

தாய் வெளிநாட்டில்! பெண் பிள்ளைகளுக்கு தந்தை செய்த கொடூரம் -


மட்டக்களப்பு - களுவன்கேணி, பலாச்சோலை கிராமத்தில் தமது இரண்டு பிள்ளைகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவரை ஏறாவூர் பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

களுவன்கேணி, பலாச்சோலை பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்தே தமது இரண்டு பிள்ளைகளையும் குறித்த நபர் துஸ்பிரயோகப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்த 13 வயது சிறுவனும் 10 வயது சிறுமியுமே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிள்ளைகளின் தாய் ஒருவாரத்திற்கு முன்பாக தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில், தந்தையின் அரவணைப்பிலேயே பிள்ளைகள் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேநேரம் சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தாய் வெளிநாட்டில்! பெண் பிள்ளைகளுக்கு தந்தை செய்த கொடூரம் - Reviewed by Author on October 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.