லண்டனில் காற்றை மாசுபடுத்தும் மக்களிடம் புதிய வரி வசூலிப்பு
லண்டனில் காற்று மாசுபடுவதைக் குறைக்க கார்களுக்கு தனிவரி வசூலிக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநலர் லண்டனில் காற்று மாசுபடுவதைக் குறைக்க நகருக்குள் நுழையும் பழமையான, புகை வெளிபடுத்தும் வாகனங்களுக்கு 10 பவுண்டு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லண்டன் மேயர் சாதிக் கான் கூறுகையில், இந்த வரி மூலம் குறைவான புகையை வெளியிடும் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவது அதிகரிக்கும் என்றும் இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் லண்டன், பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 12 நகரங்கள் 2030-ம் ஆண்டு முதல் காற்று மாசு ஏற்படுத்தாத பேருந்துகளை மட்மே இயக்கப்போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் காற்றை மாசுபடுத்தும் மக்களிடம் புதிய வரி வசூலிப்பு
Reviewed by Author
on
October 25, 2017
Rating:

No comments:
Post a Comment