தமிழகத்தில் 31 துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.2 ஆயிரத்து 345 கோடியே 50 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள 31 துணை மின் நிலையங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
மின் பாதையில் ஏற்படும் இழப்பு, மின் பராமரிப்பு செலவினங்களைக் குறைக் கும் விதமாகவும், மக்களுக்கு சீரான மின் அழுத்தத்துடன் மின்சாரத்தை விநியோகிக்கவும், தேவையான துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம்- மணலியில் ரூ.599 கோடியே 86 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், திருப்பூர் - ராசிபாளையம், நெல்லை - காணார்பட்டி, சென்னை - இராஜா அண்ணாமலைபுரம், திருச்சி - மொண்டிபட்டி, திருப்பூர் - குருக்கத்தி, திருவள்ளூர் - அம்பத்தூர் 3-வது பிரதான சாலை, தஞ்சாவூர் - கும்பகோணம், மதுரை - கிண்ணிமங்கலம், அரியலூர் - பொய்யூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை - திருமங்கலம் தெற்கு, வேலூர் - கொரட்டி, திருவண்ணாமலை - கீழ்பென்னாத்தூர், கரூர் - சிந்தாமணிபட்டி, திருவாரூர் - நீலக்குடி, ஈரோடு - திங்களூர், இராமநாதபுரம் - ஏர்வாடி, மதுரை - வாடிப்பட்டி ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இது தவிர, கோவை - தாளக்கரை மற்றும் கோமங்கலபுதூர், பெரம்பலூர் - அ.மேட்டூர், சிவகங்கை - பூசாலக்குடி, திருப்பூர் - செலாம்பாளையம், ஈரோடு - புங்கம்பள்ளி, கன்னியாகுமரி - நடைக்காவு, திருப்பூர் - திருநகர் மற்றும் பூமலூர் ஆகிய இடங்களிலும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை - எலச்சிபாளையம், நீலகிரி - ஒன்னட்டி, திருவாரூர் - கோட்டூர், நெல்லை - பரப்பாடி ஆகிய இடங்களிலும் புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறாக ரூ. 2 ஆயிரத்து 345 கோடியே 50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித் துறை செயலர் விக்ரம்கபூர், மின்வாரிய தலைவர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 31 துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
Reviewed by Author
on
November 25, 2017
Rating:

No comments:
Post a Comment