அப்போஸ்தலிக்க பரிபாலகர் கின்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுக்கு பிரியா விடை நிகழ்வு....
மன்னார் மறைமாவட்டத்தில் கடந்த இரண்டு வருட காலமாக அப்போஸ்தலிக்க பரிபாலகராக பணியாற்றிய மேதகு ஆயர் ஆண்டகை அவர்களுக்கு புனித செபஸ்தியார் பேராலயத்தில் 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை நன்றி திருப்பலியும், கெளரவிப்பும் இடம் பெற்றது.
இந்த நன்றி திருப்பலியை அப்போஸ்தலிக்க பரிபாலகர் கின்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலமை தாங்க மன்னார் மறைமாவட்ட ஆயர், மற்றும் குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், இறைமக்கள் ஒன்றாக இனைந்து இறைவனுக்கு நன்றி திருப்பலியாக ஒப்புக்கொடுத்து இறைவேண்டுதல் செய்துள்ளார்கள்.
எமது மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் ஓய்வு அறிவித்ததின் பிற்பாடு கடந்த இரண்டு வருட காலமாக மன்னார் மறைமாவட்டத்தில் மிகவும் இதய சுத்தியுடன் ஆன்மிக பணிகளை மட்டுமல்லாது மக்களின் பொது பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார் என்பதை இந்த வேளையில் நன்றியுடன் எம் மறைமாவட்டம் நினைவு கூறுகின்றது.
அப்போஸ்தலிக்க பரிபாலகர் கின்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுக்கு பிரியா விடை நிகழ்வு....
Reviewed by Author
on
January 08, 2018
Rating:

No comments:
Post a Comment