அண்மைய செய்திகள்

recent
-

முடியின் வளர்ச்சியை தூண்டும் மருத்துவம்.....


தலைமுடி அதிகமாக உதிர்ந்தால் அது நாளடைவில் முடியெல்லாம் கொட்டி சொட்டையாகிவிடும். அதற்கு மன அழுத்தம், மரபணுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் உள்ளது.
இந்த முடி உதிர்வு பிரச்சனையை சரிசெய்து முடியின் வளர்ச்சியை தூண்டுவதற்கு சிலவகை இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகிறது.
முடியின் வளர்ச்சியை தூண்டும் மருத்துவம்
  • 1 கப் கடுகு ஆயிலை சூடேற்றி, அதில் 4 டேபிள் ஸ்பூன் மருதாணி இலைகளை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி குளிர்ந்த பின் தினமும் தலையில் தடவி வர சில வாரங்களில் சொட்டையான இடத்தில் முடி வளரும்.
  • சொட்டையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில் தேனை தடவ வேண்டும். இதை அடிக்கடி செய்தால், பலன் கிடைக்கும்.
  • 1 முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது தேன் கலந்து, அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, 30 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
  • 2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 1 மணிநேரம் கழித்து நீரில் அலச வேண்டும்.
  • வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து, அதை தலையில் தடவி 40 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். அதன் பின் தலையை மசாஜ் செய்ய வேண்டும்.
  • நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காய் ஆகிய அனைத்தையும் 2 லிட்டர் நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்நீரில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து அலச வேண்டும்.
  • நெல்லிக்காயை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குளிர்ந்ததும், அதை பாட்டிலில் ஊற்றி தினமும் தலைக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • தினமும் தேங்காய் பாலை முடியின் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளித்து வந்தால், முடி ஊட்டம் பெற்று, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

முடியின் வளர்ச்சியை தூண்டும் மருத்துவம்..... Reviewed by Author on January 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.