விஜய், சூர்யா இருவருமே படப்பிடிப்பில் இப்படி தான் செய்வார்கள்- கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமா நாயகிகளில் கீர்த்தி சுரேஷ் படு பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து அவர் விக்ரமின் சாமி2, விஜய்யின் 62வது படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் விஜய், சூர்யா, விக்ரம் என அனைவரையும் பற்றி பேசியுள்ளார்.
விஜய் படப்பிடிப்பில் எப்போதும் அமைதியாக கூலாக இருப்பார். அவரை இதற்கு முன்பே நன்றாக தெரியும் என்பதால் இப்போது மிகவும் ஈஸியாக இருக்கிறது. அவரிடம் என்னால் எதையும் கேட்க முடியும்.
சூர்யா எப்போதும் அமைதி தான். எதையாவது கேட்டால் அதற்கு மட்டும் பதில்.
விக்ரம் மிகவும் ஆக்டீவாக, துறுதுறு என்று பேசிக்கொண்டே இருப்பார். அவரே எல்லாம் காட்சிகளையும் பார்த்து எப்படி நடித்திருக்கிறோம் என்று ஆராய்ச்சி செய்வார் என்றார்.
விஜய், சூர்யா இருவருமே படப்பிடிப்பில் இப்படி தான் செய்வார்கள்- கீர்த்தி சுரேஷ்
Reviewed by Author
on
February 17, 2018
Rating:

No comments:
Post a Comment