தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பு: காவிரி வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு -
காவிரி நதிநீர் பிரச்சனை நூற்றாண்டுகளாக நீடித்து வரும் நிலையில், கடந்த 2007ம் ஆண்டு நடுவர் மன்றம், 192 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து கூடுதல் நீர் கோரி தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், காவிரி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் 264 டிஎம்சி தண்ணீர் கேட்ட நிலையில், நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி ஒதுக்கியிருந்தது.
இதையும் குறைத்து உச்சநீதிமன்றம் ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீரை தடையின்றி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் கர்நாடகாவுக்கு 14 டிஎம்சி அதிகரித்து 184.75 டிஎம்சி நீர் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பு: காவிரி வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு -
Reviewed by Author
on
February 16, 2018
Rating:

No comments:
Post a Comment