அண்மைய செய்திகள்

  
-

கால்பந்தாட்டத்தில் தோல்வி: 24 மணிநேரத்தில் 11 ரசிகர்கள் சுட்டுக்கொலை -


கால்பந்தாட்டத்தில் தோல்வியடைந்ததால், மர்ம நபர்கள் சிலர் மெஸ்சிகோ ரசிகர்கள் 11 பேரை சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஸ்யாவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது, தென்கொரிய அணியை 2-1 என்று கணக்கில் மெக்ஸிகோ அணி வீழ்த்தியது. போட்டியில் பெற்ற வெற்றியை மெக்ஸிகோ ரசிகர்கள் பலரும் வீதிகளில் கொண்டாடியுள்ளனர்.

அதேசமயம், Texas எல்லை பகுதியில் உள்ள ஒரு கார் செட்டில் கால்பந்தாட்ட போட்டியை பார்த்து கொண்டிருந்த 6 பேரை, திடீரென காரில் துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய மர்ம நபர்கள், சரமாரியாக சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதேபோன்று, மற்றொரு பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடையில் போட்டியை கண்டுகளித்த கடையின் உரிமையாளர்கள் இருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் 3 பேர் என, 5 ரசிகர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது.
அடுத்தடுத்து 24 மணி நேரத்தில் நடைபெற்ற 11 கொலை சம்பவம் பொலிஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு நபர்கள் மட்டுமே என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கால்பந்தாட்டத்தில் தோல்வி: 24 மணிநேரத்தில் 11 ரசிகர்கள் சுட்டுக்கொலை - Reviewed by Author on June 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.