மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இளைஞர் விழிப்புணர்வு கருத்தமர்வு
மன்னார் இளைஞர் சேவை மன்றத்தின் எற்ப்பாடில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையுடன் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு. பூலோக ராஜா தலைமையில் தொற்றா நோய் தொடர்பான கருத்தமர்வு இடம் பெற்றது
இளைஞர்கள் மத்தியில் தொற்றா நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறித்த கருத்தரங்கு தங்குமிட வசதியுடன் இடம்பெற்றது. (29-07 -2018) இறுதிநாள் கருத்தமர்வும் கலந்தாலோசிப்பும் இடம்பெற்றது குறித்த இளைஞர் முகாமின் ஆரம்ப நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வன்னி மாகாண பணிப்பார் ஜனாப்.முனாவர் அவர்களும் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜனாப்.மஜித் அவர்களும் மன்னார் தேசிய இளைஞர் மன்றத்தின் தேசிய பிரதிநிதி யோசப் நயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ் கருத்தரங்கத்தில் மன்னார் மாவட்ட வைத்தியர்கள் மற்றும் பிராந்திய உத்தியோகஸ்தர்களும் விரிவுரைகளை வழங்கி தொற்றா நோய் பற்றிய விழிப்புணர்வு களும் தொற்றா நோயில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் தொடர்பான பூரண விளக்கம் சிறப்பாக எடுத்துரைக்கபட்டது.

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இளைஞர் விழிப்புணர்வு கருத்தமர்வு
Reviewed by Author
on
July 30, 2018
Rating:

No comments:
Post a Comment