வவுனியாவில் நீர்வழங்கல் திட்டம்: பயனடையும் 300 குடும்பங்கள் -
வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் இருந்து இராசேந்திரகுளம் வரையிலான எட்டு கிலோமீற்றர் தூரத்திற்கு குடிநீர் வழங்குவதற்கான குழாய் பதிக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் குறித்த வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கிவந்த நிலையில் இந்த திட்டத்தின் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் வரையில் பயன்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வின்போது, அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் நீர்வழங்கல் திட்டம்: பயனடையும் 300 குடும்பங்கள் -
Reviewed by Author
on
August 17, 2018
Rating:

No comments:
Post a Comment