குடலில் உள்ள கழிவுகள் பறந்துவிடுமாம் - ஜூஸ் மட்டும் குடித்தாலே போதும்!
இதை ஆரம்ப காலத்திலேயே வீட்டிலேயே ஜீரணக் கோளாறுகளையும் கழிவுகளை வெளியேற்றுவதையும் சரி செய்து கொண்டால், எந்த பிரச்சினையும் இருக்காது. இல்லாவிடின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாகப் பழுதாக ஆரம்பித்துவிடும்.
வீட்டிலேயே குடலை சுத்தம் செய்து எப்படி கழிவுகளை வெளியேற்றலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- ஆப்பிள் ஜூஸ் - அரை கப்
- லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன்
- இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்
- உப்பு - அரை ஸ்பூன்
- வெதுவெதுப்பான நீர் - அரை கப்
செய்முறை
நீளமான டம்ளர் எடுத்துக் கொண்டு, அதில் 4 ஸ்பூன் அளவுக்கு சுத்தமான வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.வெதுவெதுப்பான தண்ணீரை மூன்று அவுன்ஸ் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை கொதிக்க வைக்கக் கூடாது. வெதுவெதுப்பாக தான் இருக்க வேண்டும்.
அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஆப்பிள், இஞ்சி, லெமன் ஆகிய மூன்று ஜூஸ்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், மதிய உணவுக்கு முன்பும், மதிய உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு முறையும் என மூன்று முறை குடிக்க வேண்டும்.
குறிப்பு - கர்ப்பமாக உள்ளவர்கள், உடலில் ஏதேனும் அலர்ஜி அல்லது நோய்க்குறிகள் இருப்பவர்கள், மருத்துவரிடம் ஆலோசித்து பின்னர் இந்த பானத்தைப் பருகுவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
குடலில் உள்ள கழிவுகள் பறந்துவிடுமாம் - ஜூஸ் மட்டும் குடித்தாலே போதும்!
Reviewed by Author
on
November 06, 2018
Rating:
Reviewed by Author
on
November 06, 2018
Rating:


No comments:
Post a Comment