இனப்பிரச்சினைக்கு இதுவே தீர்வு! அமைச்சர் மனோகணேசன் -
தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயற்பட்டால் தேசிய இனப்பிரச்சினையானது மிகவும் சிறிய பிரச்சினையாக மாறிவிடும் என்று தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதனை செய்வதற்காக அரசியலமைப்பிலுள்ள மொழி சம்பந்தமாக அத்தியாயத்தை நடைமுறைப்படுத்துவதோடு நாட்டின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகள் மூன்று மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மனோ கணேசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நீண்டகாலமாக நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வாக முதலாவது மூவின மக்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இனப்பிரச்சினைக்கு இதுவே தீர்வு! அமைச்சர் மனோகணேசன் -
Reviewed by Author
on
June 26, 2019
Rating:

No comments:
Post a Comment