சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! கூட்டமைப்பு விளக்கம் -
கிடைக்கும் சந்தரப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்து.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,
“தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
எனவே இது போன்று கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையமாகக் கொண்டு தான் மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தது என்றால் முதலில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையையே கொண்டு வந்திருக்க வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது வேறு எந்த கட்சியோ யாராக இருந்தாலும் அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் பிரேரணைகள் அனைத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக் கொடுக்கவேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! கூட்டமைப்பு விளக்கம் -
Reviewed by Author
on
July 14, 2019
Rating:

No comments:
Post a Comment