தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள் பலி-படம்
தலைமன்னாரில் இருந்து இன்று(30) புதன் கிழமை காலை 7.10 மணியளவில் மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள் உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று புதன் கிழமை (30)காலை 8.25 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
-தலைமன்னார் புகையிரத நிலையத்தில் இருந்து இன்று புதன் கிழமை காலை 7.10 மணியளவில் குறித்த புகையிரதம் பயணித்துள்ளது.இதன் போதே மன்னார்-மதவாச்சி பிரதான வீதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தை தொடர்ந்து புகையிரதம் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கி சென்றது.
-தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் தொடர்ச்சியாக மாடுகள் மோதி உயிரிழக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள் பலி-படம்
Reviewed by Author
on
October 30, 2019
Rating:

No comments:
Post a Comment