மன்னார் நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நத்தார் பண்டிகை சிறப்பாக இடம் பெற்றது-படங்கள்
உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்ற இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் பண்டிகைக்கான நள்ளிரவு ஆராதனைகள் மன்னார் நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
24/12/2019 செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணிக்கு மன்னார் நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் அருட்பணி டெஸ்மன் குலாஸ் தலைமையில் பங்குத்தந்தைகள் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
இதன் போது நானாட்டான் அண்டிய கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க மக்கள் திருநாள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
திருப்பலியை தொடர்ந்து நானாட்டான் நாற்சந்தியில் இளைஞர்களால் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட பாலன் குடில் மற்றும் நட்ச்சத்திர வெளிச்சக்கூடு அமைந்திருந்த பகுதியில் விசேட விதமாக கறோல் கீதம் இசைக்கப்பட்டு மின்னொலியில் இயேசுகிறிஸ்த்து பாலன் பிறப்பு விழாவை மிகவும் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
மன்னார் நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நத்தார் பண்டிகை சிறப்பாக இடம் பெற்றது-படங்கள்
Reviewed by Author
on
December 25, 2019
Rating:

No comments:
Post a Comment