அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாவை சேனாதிராஜா சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளது

இலங்கையின் போர் குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையானது நடைபெற்றுள்ளதாகவும் அவை அடுத்த கட்டத்திற்கு இன்னும் கொண்டு செல்லப்படவில்லை எனவும் தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உபதலைவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜ தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்களின் பிரச்சினை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மன்னார் ஆகாஸ் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று செவ்வாய் மாலை இடம் பெற்ற வேலையில் ஊடகவியளாலர்களின் கேள்விக்கு பதில் வழங்கியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் சர்வதேச விசாரணை இடம் பெற்றுள்ளது ஆனாலும் அது அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்படவில்லை சர்வதேச விசாரணை இன்னும் விசாரிக்கப்படவிருந்தால் அது சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு எடுத்து செல்லப்படுகின்ற போது அவர்கள் மேலதிக சாட்சிகளை அடையாளங்களை எடுப்பதற்கு ஞாயம் இருக்கும் இப்பொழுது தேவையானது நடைபெற்ற விசாரணையின் அறிக்கை உள்ளது அந்த அறிக்கையில் அடிப்படையில் நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு இந்த பிரேரனையை  கொண்டு செல்ல வேண்டியதே இனி மேற்கொள்ள வேண்டிய முக்கியமான  ஒரு அடுத்த கட்டமாக உள்ளது என தெரிவித்தார்.

மன்னாரில் மாவை சேனாதிராஜா சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளது Reviewed by Author on March 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.