அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று -


யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 24 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 12 பேருக்கு தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை அரியாலை பகுதியில் சுவிஸ் போதகரோடு கூடியளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக April 1, April 3 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரை யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளர்கள் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - Reviewed by Author on April 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.