மன்னாரில் 'சென் ஜோன் அம்யுலன்ஸ்' படையினரினால் திணைக்களங்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி வைப்பு.
மன்னார் மாவட்ட 'சென் ஜோன் அம்யுலன்ஸ்' ((St.John Ambulances) ) படையினரால் நேற்று வியாழக்கிழமை16-04-2020 மன்னார் மாவட்டத்தில் உள்ள திணைக்களம்,மற்றும் படைத்தரப்பினருக்கு வழங்கி வைக்கும் வகையில் முகக்கவசங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இக்கட்டான சூழ்நிலையில் எதிர்த்து போராடி கடமையாற்றி வருகின்ற தரப்பினர்களுக்கு குறித்த முகக் கவசம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த முகக்கவசங்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகான்றாஸ் அவர்களுக்கு வழங்கி வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் பிரதேச செயலகம், மன்னார் வலய கல்வி திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கு வழங்கி வைக்கும் வகையில் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் கொரோனா தொற்றுடன் எதிர்த்துப் போராடும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இக்கட்டான சூழ்நிலையில் எதிர்த்து போராடி கடமையாற்றி வருகின்ற தரப்பினர்களுக்கு குறித்த முகக் கவசம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த முகக்கவசங்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகான்றாஸ் அவர்களுக்கு வழங்கி வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் பிரதேச செயலகம், மன்னார் வலய கல்வி திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கு வழங்கி வைக்கும் வகையில் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் கொரோனா தொற்றுடன் எதிர்த்துப் போராடும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் 'சென் ஜோன் அம்யுலன்ஸ்' படையினரினால் திணைக்களங்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
April 17, 2020
Rating:

No comments:
Post a Comment