அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையில் 07 பேர் கடற்படையினரால் கைது.....!!



திருகோணமலை, போல்டர் பொயிண்ட் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள், 2020 மே 30 ஆம் திகதி கடற்படை மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள், திருகோணமலை போல்டர் பொயிண்ட் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டனர்.


அங்கு, ஒரு டிங்கி படகு, ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம், தடைசெய்யப்பட்ட வலையொன்று உட்பட சில மீன்பிடி பொருட்கள் ஆகியவற்றை கடற்படை பறிமுதல் செய்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 முதல் 38 வயதிற்குட்பட்ட புல்மூட்டை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட வலை, டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம் உட்பட சில மீன்பிடி பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை குச்சவேலி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



திருகோணமலையில் 07 பேர் கடற்படையினரால் கைது.....!! Reviewed by Author on June 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.