மன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீதமான வாக்குகள் பதிவு-அமைதியான முறையில் தேர்தல்
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று
புதன் கிழமை(5) காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது.
-காலை
7 மணிமுதல் 12 மணி வரையுமான நேரப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 49.53
வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரி
தெரிவித்தார்.
-இந்த நிலையில் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் இடம் பெற்று வருகின்றது.
-காலையில்
வாக்களிப்புக்கள் மந்த கதியில் இடம் பெற்ற போதும் தற்போது மக்கள் மற்றும்
வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்கள் வாக்களித்து வருகின்மையினை அவதானிக்கக்கூடியாதாக உள்ளது.
மன்னார்
மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் அமைக்கப்பட்ட 76
வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது...
மன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீதமான வாக்குகள் பதிவு-அமைதியான முறையில் தேர்தல்
Reviewed by Author
on
August 05, 2020
Rating:

No comments:
Post a Comment