யாழ். போதனா வைத்தியசாலையில் மாடியிலிருந்து விழுந்து பெண் ஊழியர் ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்துக் கொண்டாரா என்று விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் இன்று (30) பிற்பகல் இடம்பெற்றது.
பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் மாடியிலிருந்து விழுந்து பெண் ஊழியர் ஒருவர் பலி!
Reviewed by Author
on
August 30, 2020
Rating:

No comments:
Post a Comment