மன்னார் கடலில் கரையொதுங்கிய 700 கிலோ எடையுள்ள அருகிவரும் மீன்
மன்னார் ஆதாம் பாலத்திற்கு உட்பட்ட தேசிய வனப் பூங்கா
பகுதியில் பாரிய மீன் சடலமாக கரையொதுங்கியுள்ளதை தொடர்ந்து வனஜீவராசிகள்
திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு உடற்கூற்றுபரிசோதனை
மேற்கொண்டுள்ளனர்
தலைமன்னார்
ஊர்மனை வன ஜீவராசிகள் திணைக்கள வட்டாரக் காரியாலய பகுதிக்குட்பட்ட
நடுக்குடா கடல் வளப் பூங்கா கரையோரப்பகுதியில் குறித்த கடற்பன்றி என
பெயருடைய பாரிய மீன் கரையொதுங்கிருந்தமையை கடற்கரையோர ரோந்துப்பணியில்
ஈடுபட்ட கடற்படையினர் அவதானித்து குறித்த பகுதி வன ஜீவராசிகள்
தினைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்
அதனை தொடர்ந்து குறித்த தினைக்கள அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து குறித்த மீனை பார்வையிட்டதுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டனர்
அதனடிப்படையில்
மீனின் ஒருபகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து நேற்று பகல் குறித்த மீனின் உடற்கூற்றுப்பரிசோதனை வன ஜீவராசிகள்
தினக்கள வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களினால்
முன்னெடுக்கப்பட்டது
குறித்த
கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்ந்தது
என்பதுடன் கரையொதுங்கிய கடற்பன்றி 3.3 மீற்றர் நீளமானதும் சுமார் 700 கிலோ
கிராம் எடை கொண்டதாகும்
குறித்த
கடற்பன்றியின்உடற்கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற பின்னர் குறித்த
அறிக்கையானது மன்னார் நீதவான் நீதி மன்றிற்கு சமர்பிக்கப்படவுள்ளமை
குறிப்பிடதக்கது..
மன்னார் கடலில் கரையொதுங்கிய 700 கிலோ எடையுள்ள அருகிவரும் மீன்
Reviewed by Author
on
August 10, 2020
Rating:

No comments:
Post a Comment