எரோல் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்!
இந்நிலையில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரோல் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
குறித்த தோட்டத்தில் ஒரு வீடு மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன. சில வீடுகளில் சுவர்கள் இடிந்துள்ளதுடன் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.
மலையத்தில் இன்று(சனிக்கிழமை) காலை வேளையில் கன மழை பெய்யாத போதிலும், அடுத்துவரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எரோல் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்!
Reviewed by Author
on
September 19, 2020
Rating:
Reviewed by Author
on
September 19, 2020
Rating:


No comments:
Post a Comment