கொரோனா அச்சம் – மழைக்காலக் கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கும் நிலையில் புதன்கிழமை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக எதிர்க்கட்சியினருடன் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பல அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தொடரை முன்கூட்டியே நிறைவு செய்வதற்கு ஆதரவளித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் நிறைவு செய்வதற்கு முன்னால் 11 சட்டமூலங்களை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு உள்ளது.
இதுவரை மூன்று வேளாண் சட்டமூலங்கள் மக்களவையில் மட்டுமே நிறைவேறியுள்ளன. அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் குறைப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சம் – மழைக்காலக் கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய தீர்மானம்
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment